கொரோனாவின் தீவிரம் இந்த மாத மத்தியில் குறைவடைய ஆரம்பிக்கும்!

Saturday, May 8th, 2021

கொரோனா வைரஸ் தொற்றின் எழுச்சி, இந்த மாத மத்தியிலிருந்து சரியத்தொடங்கும் என்று பிரபல தடுப்பூசி நிபுணர் ககன்தீப் காங் நம்பிக்கையூட்டும் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

இந்திய பெண் ஊடகவியலாளர்களுடைய இணைய வழிக் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய பிரபல தடுப்பூசி நிபுணர் ககன்தீப் காங், ‘இன்னும் ஒன்று அல்லது இரண்டு உச்சங்களைக் கொரோனா பாதிப்பு தொடக்கூடும். ஆனால், தற்போதுபோல மோசமாக இருக்காது. தற்போது உலகளவில் கடந்த ஆண்டு தாக்காத சில பகுதிகளுக்கு கொரோனா பரவல் செல்லத்தொடங்கி இருக்கிறது. அதாவது நடுத்தர வர்க்கத்தினரிடமும் கிராமப்புறத்தினரிடமும் கொரோனா தாக்கத்தொடங்கியுள்ளது. தடுப்பூசிகள் செயல்திறன் மிக்கவை. அவற்றைச் செலுத்திக்கொள்வதை அதிகரிக்க வேண்டும். கொரோனாவைப் பொறுத்தமட்டில் பரிசோதனைகள் வெளிப்படுத்துவதை விட பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது.

இந்த மாத மத்தியிலிருந்து கொரோனா பாதிப்பு சரியத் தொடங்கி விடும் என்று தரவுகளை வைத்துப் பார்க்கும்போது தெரிகிறது. இந்த வைரஸ் எதிர்காலத்தில் மிகவும் மோசமான காய்ச்சல் வைரஸ் போல மாறும். இது பருவக்காய்ச்சல் போல வந்து செல்லக்கூடும். அது அப்படியே பூமியில் தங்கி விடுமென்றாலும் நோய் எதிர்ப்புச்சக்தி மூலமும் தடுப்பூசிகளாலும் மக்கள் இதற்கு எதிரான ஆற்றலைப் பெறுவார்கள்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related posts: