குற்றவாளி அரசியல்வாதிகள், தேர்தலில் போட்டியிட நிரந்தரத் தடை விதிக்க மத்திய அரசு எதிர்ப்பு!
Thursday, April 20th, 2017
குற்றச்செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு, தேர்தலில் போட்டியிட நிரந்தரத் தடை விதிக்கவேண்டுமென உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட பொதுநல வழக்கிற்கு மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
‘குற்றச்செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு, தேர்தலில் போட்டியிட நிரந்தரத் தடை விதிக்கவேண்டும்’ என்ற வழக்கிற்கு மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில், குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கான தகுதி நீக்க அதிகாரங்கள் ஏற்கெனவே உள்ளன என்றும், இதற்குப் புதிய தடைச் சட்டம் தேவைப்படாது எனவும் மத்திய அரசின் சட்டத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி அரசியலில் இருப்போர் குற்றச்செயலில் ஈடுபட்டால், ஆறு ஆண்டு காலத்துக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|