எந்நேரமும் போர் மூழலாம் – பதற்றமான சூழலில் இந்திய சீனா எல்லை பகுதி!

Monday, June 22nd, 2020

லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த மாதம் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ந் தேதி இரவு திடீரென்று இந்திய-சீன படைகள் மீண்டும் மோதலில் ஈடுபட்டன.

இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 35 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த மோதல் விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து எல்லையில் நீடித்து வரும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

குறிப்பாக சீனா ஆக்கிரமிப்பு மனநிலையுடன் எல்லையில் வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு இருப்பதாக இந்திய பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

எனினும் எல்லையில் இந்திய மற்றும் சீனப் படைகள் அங்கு முழுமையாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன, விமான தளங்கள் செயல்பாடுகளை தொடங்கி உள்ளதுடன் மற்றும் கடற்படை உத்தரவுக்காக தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இராணுவ பார்வையாளர்கள் சமூக ஊடகங்களில் ௲ எல்லையின் இருபுறமும் ௲ ஆக்கிரமிப்பின் அளவைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் “பழிவாங்கக் கேட்பவர்கள் அனைவரும் போர்க்குணமிக்கவர்கள், இரு அணுசக்தி நாடுகளுக்கிடையேயான ஒரு போர் ஏற்படுத்தக்கூடிய அழிவு பற்றிய எந்த சிந்தனையும் இல்லாதவர்கள் என இந்திய ராணுவ முன்னாள் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஜூன் 15 அன்று இந்திய அல்லது சீன வீரர்கள் இராணுவ நெறிமுறைக்குக் கீழ்ப்படியாமல் இருந்திருந்தால், அருகிலுள்ள ரோந்துப் புள்ளி 15 மற்றும் 17 இல் அதிக வன்முறையுடன் எல்லை முழுவதும் ஒரு மிகப்பெரிய போர் நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: