காஷ்மீரில் மோதல் தொடர்கிறது : ஒருவர் பலி

Thursday, August 25th, 2016

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பிரிவினைவாத சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த மாதத்தில் காஷ்மீர் மாநிலத்தில், ஆர்ப்பாட்டங்கள் துவங்கியதிலிருந்து, இது போன்று 70 க்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இம்மாநிலத்தில் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த போலீசார் வெடிமருந்துகள் , கண்ணீர்ப்புகை குண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த வருகிறது. ஆனாலும், இங்கு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தற்போது காஷ்மீரில் நிலவும் பிரச்சனையை தீர்க்க, எந்த அரசியல் முயற்சிகளும் நடைபெறவில்லை என காஷ்மீர் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருவதை தொடர்ந்து, இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்த காஷ்மீருக்கு வருகை புரிந்துள்ளார்

Related posts: