காலநிலை மாற்றம் மோதலால் 3 மில்லியன் எத்தியோப்பியர்கள் பாதிப்பு – அந்நாட்டின் தலைவர் கிறிஸ் நிகோய் தெரிவிப்பு!
Thursday, February 8th, 2024
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம், வரும் வாரங்களில் காலநிலை மாற்றம் மற்றும் மோதலால் பாதிக்கப்பட்ட 3 மில்லியன் எத்தியோப்பியர்களை இலக்காக கொண்டு செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எத்தியோப்பியா தலைவர் கிறிஸ் நிகோய் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது,,
“வடக்கு எத்தியோப்பியாவில் உணவுப் பாதுகாப்பு மோசமடைந்து வருவதைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டுள்ளனர். அத்துடன் பலர் கடுமையான பசியை எதிர்கொள்கிறார்கள் என தெரிவித்துள்ளது.
எத்தியோப்பியாவின் டைக்ரே, அஃபர், அம்ஹாரா மற்றும் சோமாலி பிராந்தியங்களில் “3 மில்லியன் வரை உணவு உதவிகளை வழங்குவதற்கான வேகத்தில் இப்போது செயல்படுவதாக” கூறப்பட்டுள்ளது.
மனிதாபிமான தானியங்களை திருட எத்தியோப்பிய அதிகாரிகள் பாரிய திட்டம் தீட்டியதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் மார்ச் 2023 இல் டிக்ரே பிராந்தியத்திற்கான உணவு உதவியை நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


