காபூலில் தற்கொலை தாக்குதல் –  40 பேர் பலி!

Saturday, December 30th, 2017

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 40 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

இதுதவிர 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆப்கான் வானொலி முகவர் நிலையத்தில் கூடியிருந்த ஊடகவியலாளர்களை குறிவைத்தே இந்த தாக்கதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை குண்டு தாக்கதலை அடுத்து மேலும் இரு வெடி சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஆப்கான் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக ஷியா முஸ்லிம் பிரிவினரை குறிவைத்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பல தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரையில், எந்த குழுக்களும் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை.இந்தநிலையில் இன்று பலியானவர்களில் சில மாணவர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதேவேளை, ஆப்கானிஸ்தானை சோவியத் துருப்பினர் ஆக்கிரமிப்பு செய்து இன்றுடன் 38 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது.

Related posts: