காபுலில் 24 பேர் பலி!
Tuesday, July 25th, 2017
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 24 பேர் பலியாகினர். ற்றூர்தி ஒன்றினைக் கொண்டு இந்த தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் 42 பேர் வரையில் காயமடைந்தனர். அவர்களில் மூன்று பாதுகாப்பு படையினரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. ஷியா முஸ்லீம்கள் செறிந்து வாழும் குறித்த பகுதியில் அரச அதிகாரிகள் பயணித்த பேரூந்து ஒன்றை இலக்கு வைத்தே இந்த தற்கொலை தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நடைமுறைக்கு வந்தது 6 நாடுகளுக்கான பயணத்தடை !
கனடாவில் கோர விபத்து - மூவர் பலி!
கென்யாவில் வகுப்பறை கட்டிடம் இடிந்து விழுந்து 7 குழந்தைகள் உயிரிழப்பு!
|
|