கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனையிடவுள்ள வடகொரியா!
Monday, June 12th, 2017
வடகொரியா விரைவில் மேலுமொரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை சோதனையிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகிள்ளன
வடகொரிய ஊடகங்களை சுட்டிக்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன தொடர்ந்து வடகொரிய பல்வேறு ஏவுகணை பரிசோதனைகளில் ஈடுப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகளின் உத்தரவை மீறி இந்த செயற்பாடுகள் வடகொரியாவினால் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளதுடன், இவை உலக நாடுகளை அச்சுறுத்தும் நோக்கிலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன
எவ்வாறாயினும் அவற்றுள் ஒரு சில ஏவுகணைகளே வெற்றியளிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இந்தநிலையில், தற்போது சோதனையிடப்படவுள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றி வெற்றியளிக்கும் எனவும் வடகொரிய தகவல்கள் தெரிவிக்கின்றன
Related posts:
துறைமுக அபிவிருத்திக்கு நோர்வே உதவி - இலங்கைக்கான நோரவே தூதுவர்!
போலந்திற்கு மேலும் ஆயிரம் துருப்பினர்? - அமெரிக்கா ஜனாதிபதி!
காசாவில் ஒரே நாளில் மூன்று கட்டிடங்கள் தரை மட்டம்; 42 பேர் பலி, பலர் காயம்!
|
|