கடுமையான பனி பொழிவு: பிரித்தானியாவில் 60 க்கும் அதிகமானோர் பலி!
Thursday, January 12th, 2017
ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவில் நிலவி வரும் கடுமையா பனிப் பொழிவின் காரணமாக 60 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடு இல்லாதவர்களும், வயோதிபர்களுமே அதிகளவில் உயிரிழந்திருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வீடு இல்லாதவர்களுக்கு பாடசாலைகளில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த முகாம்களுக்கு செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் போலாந்தில் ஏற்பட்ட கடுமையான பனிப் பொழிவு காரணமாக 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்ததாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அனைத்து குடிமகனுக்கும் கட்டாய ஊதியம் - சாதனை படைத்த சுவிஸ்!
மீண்டும் விண்ணில் பாய்ந்தது ஏவுகணை!
முன்னாள் சபாநாயகர் கைது!
|
|