பாகிஸ்தானுடன் கூட்டு போர் ஒத்திகை : ரஷ்யாவுக்கு இந்தியா எச்சரிக்கை!

Friday, October 14th, 2016

பாகிஸ்தானுடன் கூட்டு போர் ஒத்திகையில் ஈடுபட்டதோடு, அந்நாட்டுடன் தொடர்ந்து நட்புறவு பாராட்டி வரும் ரஷ்யாவுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவின் நீண்டகால நட்பு நாடாக ரஷ்யா இருந்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக ரஷ்யா, பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டி வருகிறது. சமீபத்தில் ரஷ்யா பாகிஸ்தானிடையே கூட்டு போர் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

உரி இராணுவ முகாமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருந்த நிலையில் இந்த பயிற்சி நடந்தது. தீவிரவாதிகள் தாக்குதலால் ரஷ்யா தனது கூட்டு ராணுவ பயிற்சியை வாபஸ் பெறும் என இந்தியா எதிர்பார்த்தது. ஆனால் இரஷ்யா திட்டமிட்டபடி பயிற்சியை நடத்தியது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு வி‌டயங்களிலும் பாகிஸ்தானுக்கு ஆதரவு நிலையை ரஷ்யா எடுத்து வருகிறது.இதனால் இந்தியா, ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இதுதொடர்பாக ரஷ்யாவில் உள்ள இந்திய தூதர் பங்கஜ்சரண் ரஷ்யாவில் நிருபர்களிடம் கூறியதாவது;

சமீப காலமாக பாகிஸ்தானுடன் ரஷ்யா அதிக நட்புறவு வைத்திருப்பது இந்தியாவிற்கு எதிரான செயலாக கருதப்படுகிறது. எனவே நாங்கள் இது சம்மந்தமாக ரஷ்யாவுக்கு கடிதம் மூலம் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறோம். பாகிஸ்தானுடன் போர் பயிற்சியில் ஈடுபட்டது தவறான நடவடிக்கையாகும்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்றும் நாங்கள் ரஷ்யாவிடம் கூறியிருக்கிறோம். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நாங்கள் 3-வது தடவையாக எங்கள் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

கோவாவில் வருகிற சனிக்கிழமை ரஷ்யா – இந்தியா வருடாந்திர கூட்டம் நடைபெறுகிறது. பிரிக்ஸ் மாநாட்டின் முன்னோட்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ரஷிய அதிபர் புதின் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் இந்தியா ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

1-38

Related posts: