கடமை தவறிய உறுப்பினர்களை உயிருடன் நாய்களுக்கு இரையாக்கும் ஐ.எஸ்.!

Wednesday, May 25th, 2016

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தமது தீவி­ர­வாத குழுவைச் சேர்ந்த கடமை தவ­றிய கட்டளைத் தள­ப­தி­களை உயி­ருடன் நாய்­க­ளுக்கு இரை­யாக்கி அவர்­க­ளுக்கு மரணதண்டனை நிறைவேற்றி வரு­வது தொடர்பான தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

தீவி­ர­வாத குழுவைச் சேர்ந்த தமது தலைமை அதி­கா­ரி­க­ளது கட்­ட­ளை­களைப் பூர்த்தி செய்யத் தவறிய கட்­டளைத் தள­ப­தி­களை மரத்­துடன் கட்டி வைத்து அவர்­களை நாய்களால் கடித்துக் குதறச் செய்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்டு

வரு­வ­தாக வட ஈராக்கில் கவெர் முன்­ன­ரங்கில் போரில் ஈடு­பட்ட குர்திஷ் பெஷ்மெர்கா கட்­டளைத் தள­ப­தி­யான ஹஸன் கலா ஹஸன் தெரி­வித்­துள்ளார்.

ஐ.எஸ். தீவி­ர­வாத குழு உறுப்­பி­னர்கள் பலர் அண்மைக் கால­மாக அந்த தீவி­ர­வாத குழுவிலி­ருந்து வில­கு­வதும் சிரியா மற்றும் ஈராக்கில் தாம் பலம்­பெற்று விளங்கும் இடங்­க­ளி­லி­ருந்து தீவி­ர­வாத குழு உறுப்­பி­னர்கள் பின்­வாங்க நேர்­வதும் அதி­க­ரித்து வருகின்ற நிலை­யி­லேயே இந்த மரணதண்டனை நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுக்கப்பட்டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தமது குழு­விற்கு பயன்­ப­டா­த­வர்கள் எனக் கருதும் உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக இந்த மரணதண்டனை முறை­மையை பிர­யோ­கிப்­பதன் மூலம் அந்தக் குழுவைச் சேர்ந்த ஏனைய உறுப்பினர்களை அச்சுறுத்துவதே ஐ.எஸ். தீவிரவாதிகளின் நோக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது

Related posts: