ஓ.பி.எஸ்.சின் இராஜினாமா ஏற்பு – முதல்வராக 9ம் திகதி சசிகலா பொறுப்பேற்பு!
Tuesday, February 7th, 2017“தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக 5.02.2017-ல் அனுப்பிய கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.
மேலும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பில் தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் இராஜினாமா செய்தார். எதிர்வரும் 9-ம் திகதி ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் 21-வது முதல்வராக சசிகலா பதவியேற்கிறார் என, இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
Related posts:
பிரபல பாடகர் யேசுதாஸுக்கு பத்ம விபூஷண் விருது!
ஆப்கானிஸ்தானில் செயற்பாடுகளை இடைநிறுத்தியது செஞ்சிலுவை சங்கம்!
தீர்ப்புக்கு அஞ்சி வெளிநாட்டுக்கு தப்பிய தாய்லாந்து பிரதமர்!
|
|