பசிபிக் கடலில் விழுந்தது சீன விண்வெளி மையம்!

Monday, April 2nd, 2018

விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சீன விண்வெளி ஆய்வு மையமான டியாங்காங் 1 தெவ் பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கியது.

சீனா 2011-ஆம் ஆண்டு ஏவிய ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையம் செயலற்றுப் போய்விட்டதாக சீனா கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21-ஆம் தேதி அறிவித்தது.

அதன் பின்னர் விண்வெளியில் கட்டுப்பாடற்று சுற்றி வந்துகொண்டிருந்த இந்த விண்வெளி நிலையம் பூமியை நோக்கி வரத் தொடங்கியது. விண்வெளி நிலையத்தின் சில பாகங்கள் மார்ச் 30-ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் முதல் வாரத்தில் பூமியில் விழும் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தனர்.

இந்நிலையில், விண்வெளியில் கட்டுப்பாடற்று சுற்றிய சீன விண்வெளி நிலையத்தின் பாகங்கள் பூமியின் வளிமண்டல பகுதிக்குள் இன்று நுழைந்த வேகத்திலேயை பூமியை நோக்கி பாய்ந்தபோது காற்றின் உராய்வினால் அதன் பெரும்பாலான பகுதிகள் எரிந்த நிலையில் சீன நேரப்படி இன்று திங்கள்கிழமை காலை 8.15 மணியளவில் (உள்ளூர் நேரப்படி 10.15 மணியளவில்) தென் பசிபிக் கடலில் விழுந்துள்ளதாக சீன விண்வெளி பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடலில் விழுந்துள்ள பகுதி பெரும்பாலும் விண்வெளி நிலையத்தின் என்ஜின் போன்ற கனமான பாகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பூமியில் விழுந்த பாகங்களை தேடும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். விண்வெளி ஆய்வுக்கூட பாகங்கள் பசிபிக் கடலில் விழுந்திருப்பதால் பூமிக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது

2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 29-ஆம் தேதி 8 டன் எடைக்கொண்ட ‘டியான்காங்-1’ விண்வெளி நிலையத்தை லாங் மார்ச் 2 எப்/ஜி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது சீனா. சீனாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கூடமான இது தனது ஆயுட்காலத்தை இரண்டுகளுடன் அதாவது 2013-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் தனது செயல்பாட்டை முடித்துக்கொண்டது.

Related posts: