எகிப்தின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக் விடுதலை!

அராபி வசந்தம்´ எனப் பெயரிடப்பட்ட 2011 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சியின் பின்னர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் நேற்று(24) ஆம் திகதி விடுவிக்கப்பட்டுள்ளார்.
சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கய்ரோ இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி அன்வர் சதான் கொலை செய்யப்பட்ட பின்னர் அதிகாரத்திற்கு வந்த முபாரக் 4 வது ஜனாதிபதியாக செயற்பட்டார்.
2011 ஆம் ஆண்டு அமைதியான மக்கள் எழுச்சியின் போது நூற்றுக்கணக்கானவர்களை கொலை செய்ததாக ஹொஸ்னி முபாரக் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
Related posts:
நாளை பதவியேற்பு!
ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் மதகுருவுக்கு முக்கிய பங்கு - எர்துவான் !
3 வார தனிமைப்படுத்தல் காலத்தை வெளியிட்ட தென்னாபிரிக்கா..!
|
|