உணவக தாக்குதல்: பிரித்தானிய ஆசிரியர் கைது!

Sunday, August 14th, 2016

ஆறு வாரங்களுக்கு முன்ர்  நடத்தப்பட்ட 20 பிணைக்கைதிகள் கொல்லப்பட்ட உணவகத்தின் மீதான இஸ்லாமியவாத தாக்குதலில் தொடர்புடையதாக, ஹாஸ்நாட் கரிம் என்ற வங்கதேச வம்சாவளி பிரித்தானிய ஆசிரியர் ஒருவரை வங்கதேச அரசு கைது செய்தள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

அவருடைய மகளின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவர் அந்த உணவகத்தில் இருந்தார் என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். தாக்குதல் நடத்தியோருடன் மிகவும் அமைதியாக அவர் செயல்பட்டிருப்பதாகக் கூறி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதே உணவகத்தில் இருந்த மாணவர் ஒருவரும் இதே மாதிரியான சூழ்நிலைகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை பிடித்திருந்தாலும் இன்னும் முறையாக கைது செய்யவில்லை. கரிமுக்கு எட்டு நாட்களும், கானுக்கு ஆறு நாட்களும் காவலில் வைக்க நீதிமன்றம் ஒன்று அனுமதி அளித்திருப்பதாகதகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: