சிரியாவின்  நீதிமன்ற வளாகத்தில் தற்கொலைக் தாக்குதல்: 25 பேர் பலி!

Thursday, March 16th, 2017

சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் உள்ள நீதிமன்ற கட்டடத் தொகுதி வளாகத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியத் தலைநகரில் கடந்த 5 நாட்களில் நடத்தப்பட்ட இரண்டாவது குண்டுத் தாக்குதலாக இது பதிவாகியுள்ளது.

டமஸ்கஸின் மத்திய பகுதியில் உள்ள நீதிமன்றக் கட்டடத் தொகுதியை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றக் கட்டடத் தொகுதியினுள் நுழைய முற்பட்ட சந்தேகநபரை வாயிலில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே அந்த நபர் குண்டை வெடிக்கச் செய்ததாக சிரேஷ்ட அரச சட்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: