உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Saturday, April 17th, 2021சர்வதேச ரீதியில் கடந்த இரண்டு மாதங்களில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கொரொனா தொற்று பரவல் உச்சக்கட்டத்தை நெருங்குவதை இது வெளிப்படுத்துவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அச்சம் வெளியிட்டுள்ளது.
பிரேசில், இந்தியா, போலந்து, துருக்கி உள்ளிட்ட மேலும் சில நாடுகளில் கொரோனா பரவல் நிலை தீவிரமடைந்துள்ளது.
இதேநேரம், அனைத்துப் பிராந்தியங்களிலும் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
000
Related posts:
ஜெயலலிதாவை பார்வையிட உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு!
மன்னிப்பு கடிதம் எழுதி தர இம்ரான்கானுக்கு உத்தரவு!
நாட்டின் இருப்பிற்கு ஆபத்து ஏற்பட்டால் அணுவாயுதங்களை பயன்படுத்துவோம் – ரஸ்யா அதிரடி அறிவிப்பு!
|
|