ஈக்வடோரின் ஜனாதிபதி வேட்பாளர் சுட்டுக் கொலை !

Thursday, August 10th, 2023

ஈக்வடோரில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அந்த நாட்டின் தேசிய சட்டமன்ற உறுப்பினரான பெர்ணான்டோ விலாவிசென்ஸியோ (Fernando Villavicencio) இந்த துப்பாக்கி சூட்டில் பலியானார்.

வடக்கு நகரமான குய்டோவில் இடம்பெற்ற பேரணி ஒன்றில் பங்கேற்று அவர் அங்கிருந்து வெளியேறுவதற்காக மகிழுந்து ஒன்றில் ஏறுவதற்கு முற்பட்ட போது சந்தேகநபர் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது!

000

Related posts: