இஸ்ரேலின் கொடூரம்: கண்மூடிப் பார்த்திருக்கும் உலக வல்லரசுகள்!

Saturday, April 2nd, 2016
துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த நிலையில் காணப்பட்ட பாலஸ்தீனியர் ஒருவர் மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டு அவரை இஸ்ரேலிய வீரர் கொலைசெய்த சம்பவத்தை காண்பிக்கும் ஒளி நாடவொன்று கடும் உணர்வலைகளை தோற்றுவித்துள்ள  அதேவேளை குறிப்பிட்ட இராணுவவீரரிற்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலிய இராணுவவீரர் ஒருவரை பாலஸ்தீனியர் ஒருவர் கத்தியால் குத்துவதையும், பின்பு அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் வீழ்ந்து கிடப்பதையும் குற்றம் சாட்டப்பட்டுள்ள இராணுவவீரர் காயத்துடன் காணப்படுபவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதையும் காண்பிக்கும் ஒளிநாடாவை மனித உரிமை அமைப்பொன்று வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட இராணுவீரர் தற்போது தடுத்துவைக்கப்பட்டு உள்ளார்.  பாலஸ்தீனிய நபர் தற்கொலைக் குண்டுதாரி என்ற அச்சத்திலேயே தான் அவரை சுட்டுக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவவீரர் தெரிவித்துள்ளார். எனினும் தனது நண்பர் மீது தாக்குதல் நடத்தியதற்காக பாலஸ்தீனியர் கொல்லப்பட வேண்டியவா் என தெரிவித்தபடியே இராணுவவீரர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக சகவீரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இஸ்ரேலிய பாலஸ்தீனிய சமூகத்தினர் மத்தியில் மாறுபட்ட உணர்வலைகளை தோற்றுவித்துள்ளது. இஸ்ரேலியர்கள் சிலர் குறிப்பிட்ட படைவீரர் தவறு எதுவும் செய்யவில்லை அவரை கைது செய்தது பிழை என கருத்து வெளியிட்டுள்ளனர்.

Related posts: