இலங்­கை தொடர்பில்பிர­த­ம­ர் மோடியிடம்  வை.கோ. கோரிக்கை.!

Friday, December 16th, 2016

இலங்கை அரசின் புதிய சட்­டத்தை நிறை­வேற்ற விடாமல் தடுக்க வேண்டும்  என்று ம.தி.மு.க. பொதுச் செய­லாளர் வைகோ பிர­தமர் மோடியை நேரில் சந்­தித்து கோரிக்கை விடுத்­துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ம.தி.மு.க. பொதுச் செய­லாளர் வைகோ, பிர­தமர் நரேந்­திர மோடியை நேற்று டில்லி பாராளுமன்றத்தில் உள்ள பிர­தமர் அலு­வல­கத்தில் சந்­தித்தார்.

இதன் பின்னர் இது குறித்து செய்­தி­யா­ளர்­க­ளிடம் வைகோ கூறு­கையில்,

பிர­த­ம­ரிடம் மூன்று முக்­கிய கோரிக்­கை­களை எடுத்­து­ரைத்­துள்ளேன். அதா­வது தமி­ழ­கத்­துக்கு ‘வர்தா’ நிவா­ரண நிதி அதிகம் அளித்­திட வேண்டும், காட்­சிப்­ப­டுத்­தக்­கூ­டாத விலங்­கு­களின் பட்டியலில் இருந்து காளை மாடு­களை அகற்ற வேண்டும் மற்றும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை நிறை­ வேற்ற விடாமல் தடுக்க வேண்டும் என்­ப­தாகும்.

தமி­ழக மீன­வர்கள் இந்­தியக் கடல் பரப்­பிலும், பன்னாட்டுக் கடல் பரப்­பிலும் மீன் பிடித்­தாலும், எல்லை தாண்டி வந்­த­தாகக் கூறி, இலங்கை கடற்படை­யினர் அவர்­களைக் கைது செய்து கொண்டு போய் இலங்கைச் சிறையில் அடைக்கின்றார்கள். பட­கு­க­ளையும் பறி­முதல் செய்து கொண்டு போகின்­றார்கள்.

மேலும், இலங்கை அரசின் புதிய சட்­டத்தை நிறை­வேற்ற விடாமல் தடுக்க வேண்டும் இலங்கை அரசு ஒரு புதிய சட்­டத்தை, 2017 ஜன­வரி மாதம் இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்ற இருக்கின்­றது. அதன்­படி, தமி­ழக மீன­வர்கள் மீது ஏழு இலட்சம் முதல் ஏழு கோடி ரூபா­வ­ரை­யிலும் அபராதம் விதிக்க இலங்கை அரசு முடிவு செய்து இருப்­பது, உல­கத்தில் வேறு எந்த நாட்­டிலும் நடக்காத கொடுமை.

எனவே, நீங்கள் தூத­ரக உற­வுகள் மூல­மாக இலங்கை அர­சுக்குக் கடும் அழுத்­தத்தைக் கொடுத்து, இந்தச் சட்டம் நிறை­வேற விடாமல் தடுக்க வேண்டும் என்று மோடியிடம் கூறினேன். இதுகுறித்து வெளியுறவுத்துறையோடு ஆலோசிப்பதாக மோடி கூறினார்” என வைகோ தெரிவித்தார்.

modi-belgaum-pti-759

Related posts: