காணாமல் போன விமானப்படை விமானத்தில் இருந்தவர்கள் உயிர் தப்ப வாய்ப்பு இல்லை – இந்திய விமானப்படை!
Friday, September 16th, 2016எட்டு வாரங்களுக்கு முன்பு காணாமல் போன இந்திய விமானப் படை விமானத்தில் இருந்தவர்கள், உயிர் தப்பியிருப்பதற்கு வாய்ப்பு குறைவு என்று அவர்களின் குடும்பத்தினரிடம் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. அந்த விமானம் கிளம்பிய சில மணி நேரத்தில் காணாமல் போனது.
அந்த ஏ என்- 32 ரக விமா னம் (AN -32) எட்டு பொது மக்கள் உட்பட 29 நபர்களை சுமந்து சென்றது. சென்னையில் இருந்து அந்தமான் தீவிற்கு கிளம்பிய அந்த விமானம், எந்தவொரு அபாய சமிக்ஞைகளும் தராமல் காணமால் போனது.
இந்த விமானத்தை கண்டுபிடிக்க தேடுதல் பணிகளில் 17 கப்பல்கள், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் 23 விமானங்கள் ஈடுபட்டன. தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் கப்பல்கள் மூலம், தொடர்ந்து கடல் படுகையில் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
அமைதிப் பேச்சுக்களின்போது தேர்தல் பேச்சுக்கள் வேண்டாம் – வாலித் அல்-மலுவ்
சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கும்- சுனாமி எச்சரிக்கை வெளியானது!
ரஷ்ய ஜனாதிபதி - வடகொரிய ஜனாதிபதி இடையே விரைவில் சந்திப்பு!
|
|