இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!
Monday, March 26th, 2018
இந்தோனேசியாவின் டனிம்பார் தீவில் இன்று(26) அதிகாலை 6.4 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
இதனால் பொது மக்கள் கடும் அச்சமடைந்துள்ளதாகவும் இதன் விளைவாக ஏற்பட்ட சேதவிபரங்கள் எவையும் வெளியாகவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கத்தினால் டனிம்பார் தீவில் உள்ள சாம்லகி பகுதியில் கடலை அண்மித்த வடமேற்கே சுமார் 222Km தூரத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
Related posts:
சீன விமான நிலையத்தில் தீ இருவர் உடல் கருகி சாவு
பன்முகத் தன்மை கொண்ட பண்பாளர் சோ ராமசாமி!
மலேசிய முன்னாள் பிரதமர் பிணையில் விடுதலை!
|
|