இந்தியாவில் வெடிவிபத்து: 20க்கும் ஆதிகமானோர் பலி!

Thursday, November 2nd, 2017

இந்தியாவின் உத்திர பிரதேஸ் – ரேபெரெலி பகுதியில் உள்ள மின்னுற்பத்தி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது

இதன்போது காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது

குறித்த மின்னுற்பத்தி நிலையத்தின் நீர் கொதியத்தில் ஏற்பட்ட வெடிப்பே இந்த அனர்த்தத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: