இந்தியாவில் மேலும் 53 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா தொற்று -ஒரே நாளில் 354 பேர் உயிரிழப்பு!

Wednesday, March 31st, 2021

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 21 இலட்சத்து 49 ஆயிரத்து 335 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரத்து 480 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் 354 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை ஒரு இலட்சத்து 62 ஆயிரத்து 468 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை ஒரு கோடியே 14 இலட்சத்து 34 ஆயிரத்து 301 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: