வெடித்து சிதறிய விமானம் : அனைத்து பயணிகளும் பரிதாபமாக பலி!
Monday, February 12th, 2018ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ வான்பரப்பில் பயணிகள் விமானமொன்று வெடித்துச் சிதறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொஸ்கோ அருகே உள்ள டொமோடிடோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏ. என்-148 என்ற சாராடோவ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் 71 பேருடன் நடுவானில் நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில், பயணித்த 71 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில் பயணம் செய்த 71 பேரில் 65 பேர் பயணிகள் என்பதுடன் ஏனைய 6 பேர் விமான ஊழியர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதேவேளை, விபத்து குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
பதின்ம வயது தற்கொலை குண்டுதாரி ஈராக்கில் கைது!
பாப்புவா நியூகினியில் பாரிய நிலநடுக்கம்: 30க்கு அதிகமானோர் பலி
காசாவுக்கான முன்மொழியப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தனது பதிலை வழங்கியது ஹமாஸ் !
|
|