ஆப்கான் படையிடம் சரணடைந்தது ஐ.எஸ் அமைப்பு!
Thursday, August 2nd, 2018
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒருவர் மற்றும் துணைத்தலைவர் உட்பட 150க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் படைகளிடம் சரண் அடைந்துள்ளதாக வட பகுதி இராணுவ தளபதி முகமது ஹனிப் ரெஸாயீ தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டு போரை பயன்படுத்தி ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் அங்கு கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதால், அவர்களுக்கும் தலிபான்களுக்கும் இடையே மோதல்கள் நடந்து வந்தது.
இந்த மோதல்கள் ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான ஜோஸ்ஜான் மாகாணத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையாக நடந்து வந்தது.
மற்றொரு பக்கம் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படைகளிடம் இருந்தும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அழுத்தம் வந்தது. இந்நிலையில் அங்கு 150க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் படைகளிடம் சரண் அடைந்துள்ளனர்.
Related posts: