அறிவியலே இந்தியாவை சுயசார்பு நாடாக்கும் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு!
Thursday, January 5th, 2023
அறிவியல் துறையில் உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாகவும், அறிவியலே இந்தியாவை சுயசார்பு நாடாக மாற்றும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் நாக்பூரில் 108வது இந்திய அறிவியல் மாநாட்டை காணொலி மூலம் பிரதமர் தொடங்கி வைத்தார்.
பின்னர் உரையாற்றிய அவர், “புதிய நிறுவனங்கள் தொடங்குவதற்கான சூழலின் அடிப்படையில் உலகளவில் முதல் 3 நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளதாகவும்,
உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் ஏழே ஆண்டுகளில் 81வது இடத்தில் இருந்து 40வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மின் உற்பத்திக்காக 5,800 மெற்றிக் தொன் எரிபொருள் விநியோகம் - பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவிப்பு!
மீண்டும் தலையெடுக்கும் டெங்கு - நாடளாவிய ரீதியில் 60,000 டெங்கு நோயாளர்கள் பதிவு!
HIV ஆபத்தில் உள்ளவர்களுக்கு அபாயத்தைத் தடுக்க புதிய சிகிச்சை அறிமுகம் - தேசிய STD எய்ட்ஸ் கட்டுப்பாட...
|
|
|


