தடையுத்தரவை கோரும் கோத்தபாய!

Monday, September 2nd, 2019


அமெரிக்காவில் தமக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தடையுத்தரவை வழங்கவேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச மனுத்தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனு கடந்த 26ஆம் திகதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க உட்பட்டவர்களின் நீதியற்ற கொலைகளில் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் கோத்தபாய மீது அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த வழக்கு காரணமாக இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது கோத்தபாய ராஜபக்சவுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை. எனவே பிரச்சாரத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதற்காகவே இடைக்கால தடையுத்தரவு மனு தாக்கல் செய்யப்பட்டது என்ற தகவல் பொய்யானது என்று கோத்தபாயவின் பேச்சாளர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Related posts: