அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: புளோரிடா மாகாணத்தில் பதற்றம்!
Monday, August 27th, 2018அமெரிக்கா – புளோரிடா மாகாணத்தில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் புளோரிடா மாகாணத்தில் வீடியோ விளையாட்டு போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்ட பொழுதுபோக்கு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஆனால் இதுவரை அதிகாரிகள் தரப்பு இதை உறுதி செய்யவில்லை. இருப்பினும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும், சம்பவம் நடைபெற்ற Jacksonville Landing பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல வேண்டாம் என பொலிஸ் தரப்பு எச்சரித்துள்ளது.
Related posts:
ரியோ ஒலிம்பிக்கில் தாக்குதல் நடத்த திட்டம்: 10 பேர் கைது!
பங்களாதேஸில் மின்னல் தாக்கி 14 பேர் பலி!
மீண்டும் திறக்கப்பட்ட சர்வதேச விமான நிலையம்!
|
|