அமெரிக்காவின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் – பிரான்ஸ்!
Wednesday, December 6th, 2017அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அறிவிக்க தன்னிச்சையாக எடுத்துள்ள முடிவு குறித்து தான் கவலை அடைந்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எந்த முடிவாக இருந்தாலும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்தின் பேச்சுவார்த்தையின் வரையறைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இவ்வாறு அங்கீகரிப்பது அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தும் என ஜோர்தான் ஏற்கனவே எச்சரித்துள்ளது.
1967 மத்திய கிழக்கு யுத்தத்தில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்திலேயே ஜெரூஸலம் நகர் அமைந்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய இரு தரப்பும் ஜெரூஸலத்துக்கு உரிமை கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியுள்ளார். இவ்விவகாரத்தில் எந்த முடிவும் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும் எனவும் பிரான்ஸ் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|