அதிமுக்கிய போர் ஆயுதங்களை வெற்றிகரமாகச் சோதனை நடத்தியுள்ளது வடகொரியா!
Saturday, June 29th, 2024
முக்கிய போர் ஆயுதங்களை வடகொரியா வெற்றிகரமாகச் சோதனை நடத்தியுள்ளதாக வட கொரிய அரச ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது.
எனினும் வடகொரியா சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
இது சர்வதேசத்தை ஏமாற்றும் செயற்பாடு எனவும் வடகொரியா மிகைப்படுத்தி கருத்துக்களை வெளியிடுவதாகவும் தென்கொரியா குறிப்பிட்டுள்ளது.
வடகொரியாவின் சோதனை நடவடிக்கைகள் வெற்றியளிக்குமாயின் அது சர்வதேசத் தடைகளுக்கு மத்தியில் ஆயுத மேம்பாட்டை முன்னோக்கிக் கொண்டு சென்றுள்ளமையைக் குறிக்கும்.
அதேநேரம் வடகொரியா நீண்ட தூரம் தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணைகளையும் பல போர்க்கப்பல்களையும் சோதனை நடத்துவதாக சில தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் சர்வதேசத் தடைகள் காரணமாக வடகொரியாவினால் முன்னோக்கிச் செல்ல முடியாது என தென்கொரியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஊழியர்களின் திறனை அதிகரிக்கும் வட கொரியா!
அமெரிக்காவை தாக்குவோம்- ஐ.எஸ். தீவிரவாதிகள் அச்சுறுத்தல்!
23 போலி பல்கலைக்கழகங்கள் - பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு!
|
|
|


