இந்திய பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊதியத்தின் 30 வீதத்தினை வழங்குவதற்கு தீர்மானம்!

Tuesday, April 7th, 2020

கொரோன வைரஸிற்கு எதிராக போராடுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு எதிவரும் வருடத்தில் தமது ஊதியத்தின் 30 வீதத்தினை வழங்குவதற்கு இந்திய பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கியுள்ளனர்.

புதுடில்லியில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது இதற்கான இணக்கம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு மேலதிகமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 2 வருடங்களுக்கு வழங்கப்படவுள்ள அபிவிருத்தி நிதி 79 ஆயிரம் கோடி ரூபாவினை கைவிடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது

Related posts: