அணு ஆயுத பரிசோதனையை நிறுத்த முடியாது – வட கொரியா !

Thursday, August 24th, 2017

 

அமெரிக்காவும் தென் கொரியாவும் இராணுவ பயிற்சியினை நிறுத்தும் வரை வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத பரிசோதனையை செய்து வரும் என அந்நாட்டின் தூதர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தென் கொரியாவில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ பயிற்சியை நிறுத்த வேண்டும் என வட கொரியா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

இரு நாடுகளும் இணைந்து இராணுவப் பயிற்சியில் ஈடுப்பட்டு வருவதால் கொரியா தீபகற்பத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது என வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் சுவிஸ்லாந்தின் ஜெனிவாவில் ஐ.நா சபை கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் வட கொரியா சார்பாக தூதரான Ju Yong-сhol பங்கேற்றுள்ளார்.

அப்போது, அணு ஆயுத பரிசோதனையில் இருந்து வட கொரியா ஒருபோதும் பின்வாங்காது. அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளின் இராணுவ பயிற்சியானது ஏற்கனவே உள்ள போர்ப் பதற்றத்தை அதிகரிக்கும்.

மேலும் இரு நாடுகளும் இணைந்து வட கொரியாவிற்கு எதிராக இரகசிய போர்த் திட்டம் தீட்டி வருகின்றன. இரு நாடுகளின் அத்துமீறலால் கொரியா தீபகற்பத்தில் அணு ஆயுதப் போர் எந்த நேரத்திலும் நிகழும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Related posts: