மலை ஏறும் வீரர் இருவர் 16 ஆண்டுகளின் பின் சடலங்களாக மீட்பு

Monday, May 2nd, 2016

இமாச்சல் பிராந்தியத்தில் மலையேறும் இருவர் 16 ஆண்டுகளுக்கு பின்னர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

பாரிய பனிச்சரிவு காரணமாக இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

உலகப் புகழ்பெற்ற மலையேறும் வீரரான அலெக்ஸ் லோவ் 1999 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சக ஒளிப்பதிவாளருடன் 8 ஆயிரத்து 13 மீற்றர் உயரமான மலையேறும் முயற்சியை மேற்கொண்டிருந்தார்.

குறித்த இருவரும் வேறு இரண்டு மலையேறும் வீர ர்களால் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும் குறித்த இருவரின் சடலங்கள் தொடர்ந்தும் பனிக்கட்டிக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 வயதான லோவ் மிகச் சிறந்த வீரரராக கருதப்பட்டதுடன், பல்வேறு மலையேறும் வீர ர்களை மீட்டவர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: