2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெற் – ஐ.சி.சி. நம்பிக்கை!

Sunday, April 29th, 2018

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஆம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கொல்கத்தாவின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஜசிசி) 5 நாள் நிர்வாக ரீதியிலான கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தின் இறுதி நாளில் ஐ.சி.சி தலைமை நிர்வாக அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்க்க ஐசிசி தீவிரமாக முயன்று வருகிறது. அதற்கான நடவடிக்கைகளை வேகமாக எடுத்து வருகின்றோம். எங்கள் முயற்சிகள் சரியான முறையில் சரியான திசையில் சென்றால் 2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் கிரிக்கெட் இடம்பெறும்.

கடந்த 1900 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த கோடை கால ஒலிம்பிக் போட்டியில் மட்டுமே கிரிக்கெட் கிரிக்கெட் இடம்பெற்றது அதன்பின் இன்னும் இடம்பெறவில்லை.

2024 ஆம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டைச் சேர்க்கக் கோரும் மனுவை சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தில் அளிக்கும் காலக்கெடு முடிந்துவிட்டது. ஆதலால் 2028 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க தீவிரமாக முயற்சிகள் நடந்து வருகின்றன. எங்களின் பேச்சுவார்த்தை சிறப்பாகச் செல்லும் பட்சத்தில் 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும். இவ்வாறு ரிச்சர்ட்சன் தெரிவித்தார்.

Related posts: