2019 ஆம் ஆண்டின் உலக கிண்ணப் போட்டிக்கு  10வது அணியைத்  தீர்மானிக்கும் தகுதிகாண் போட்டி! 

Saturday, March 24th, 2018

2019ஆம் ஆண்டின் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்கு தெரிவாகவுள்ள 10வது அணி எது என்பதை தீர்மானிக்கும் தகுதிகாண் போட்டி நடைபெறவுள்ளது.

ஏற்கனவே இந்த தொடருக்கான ஒன்பதாவது அணியாக ஸ்கொட்லாந்தை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி தெரிவானது.

சிம்பாவே உடனான போட்டியில் ஐக்கிய அரபு ராச்சியம் வெற்றி பெற்ற நிலையில், 2019ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணத் தொடரில் பங்கேற்கும்சிம்பாப்வேயின் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

தகுதிகான் தொடரில் 5 புள்ளிகளுடன் இருக்கும் சிம்பாப்வே, தலா நான்கு புள்ளிகளுடன் உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்குஇடையில் நடைபெறும் போட்டி சமநிலையில் முடிந்தால் மாத்திரமே, உலக கிண்ணத் தொடருக்கு தகுதி பெற முடியும்.

இந்த போட்டி கைவிடப்படும் பட்சத்தில் உலக கிண்ணத் தொடருக்கான 10ம் அணியாக அயர்லாந்து அணி தெரிவாகும்.

இதற்கிடையில் தற்போது இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.

இதேவேளை முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் நியுசிலாந்து அணி 3 விக்கட்டுகளை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

Related posts: