17 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரை இழந்தது இலங்கை!

Monday, November 19th, 2018

பல்லேகெலேயில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லேகலேயில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 290 ஓட்டங்களும், இலங்கை அணி 336 ஓட்டங்களும் எடுத்தன.

அதன் பின்னர், 46 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 346 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அணித்தலைவர் ஜோ ரூட் 124 ஓட்டங்கள் குவித்தார். இலங்கை தரப்பில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து, 301 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடியது. தொடக்க வீரர் கருணரத்னே 57 ஓட்டங்கள் எடுத்தார். அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 88 ஓட்டங்கள் எடுத்தார்.

Related posts: