10-ஆவது ஐ.பி.எல் –  ஏப்ரல் 5 இல் ஆரம்பம்!

Thursday, February 16th, 2017
10-ஆவது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 5-ஆம் தேதி ஹைதராபாதில் ஆரம்பமாகின்றது.
இந்த ஆண்டுக்கான முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கடந்த சீசனில் 2-ஆவதாக வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இறுதி ஆட்டமும், ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
10-ஆவது ஐபிஎல் போட்டிகள் சுமார் 47 நாள்களாக பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது. அட்டவணையிட்டபடி, ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாடும். இதில் 7 ஆட்டங்கள், அந்தந்த அணி சார்ந்த மாநிலத்தின் சொந்த மைதானத்தில் நடைபெறும். கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதல் முறையாக இந்த சீசனில் இந்தூர் மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதனிடையே, இதர ஆட்டங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி ரைசிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் புணேவில் நடைபெறுகிறது.
ஏப்ரல் 7-ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, ராஜ்கோட் மைதானத்தில் குஜராத் லையன்ஸ் அணி சந்திக்கிறது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏப்ரல் 8-ஆம் தேதி பெங்களூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. அதேநாளில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இந்தூரில் ரைசிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.

201702041218350912_IPL-2017-auction-Select-76-players_SECVPF

Related posts: