வலுவான நிலையில் இந்தியா!

Sunday, September 1st, 2019


இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

கிங்ஸ்டனில் நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தித் தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதையடுத்து, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்திய அணி, நேற்றைய முதலாம் ஆட்டநேர முடிவில் 5 விக்கட்டுக்களை இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஹனுமா விஹாரி 42 ஓட்டங்களுடனும், ரிஷப் பண்ட் 27 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

Related posts: