வேம்படி மகளிர் மகுடம் சூடியது!

Saturday, June 9th, 2018

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டத் தொடரில் 17 வயதுதுப்பிரிவு பெண்களுக்கான ஆட்டத்தில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி கிண்ணம் வென்றது.

யாழ்ப்பாண பழைய பூங்கா கூடைப்பந்தாட்டத் திடலில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி மோதியது.

முதலாவது கால்பாதி ஆட்டத்தில் வேம்படி மகளிர் பாடசாலை அணி 9:3 புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை வகித்தது. இரண்டாவது கால்பாதி ஆட்டத்தில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி 22:2 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்றது. இதையடுத்து முதலாவது பாதியின் முடிவில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி 31 புள்ளிகளையும் இந்து மகளிர் பாடசாலை அணி 5 புள்ளிகளையும் பெற்றிருந்தன.

மூன்றாவது கால்பாதியும் 12:04 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணியின் வசமானது. நான்காவது கால்பாதியையும் 22:06 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றியது வேம்படி. ஆட்டநேர முடிவில் 65:15 என்ற புள்ளிகளின் அடிப்படையில் இமாலய வெற்றிபெற்று கிண்ணம் வென்றது வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி.

Related posts: