வாழ்க்கை முடிந்துவிட்டது – சாய்னா நேவால்!

Friday, November 4th, 2016

ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் பாதியிலேயே விலகிய சாய்னா நேவால் தன் விளையாட்டு வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே நினைக்கிறேன் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் பாதியிலேயே விலகிய சாய்னா நேவால், அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் சீன சூப்பர் சீரிஸ் தொடரில் கலந்து கொள்ள மீண்டும் பயிற்சியைத் தொடங்கினார்.

ஆனால், அவரால் பழைய படி விளையாட முடியாமல் தொடர்ந்து வலியால் அவதிப்பட்டு வருகிறார்.இது குறித்து சாய்னா கூறுகையில், பலர் என் விளையாட்டு வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும் நான் திரும்ப வரமாட்டேன் என்றும் நினைக்கிறார்கள்.

என் அடி மனதில், நானும் என் விளையாட்டு வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே நினைக்கிறேன். எப்படி என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். சரியாக கணிக்க முடியாத விஷயம் இது என தெரிவித்துள்ளார்.

saina(1)

Related posts: