லசித் மலிங்காவுடன் மோதல் ஏன்? விளக்கம் சொல்கிறார் சனத் ஜெயசூரியா!
Saturday, October 29th, 2016
லசித் மலிங்காவுடன் எவ்வித மோதலும் இல்லை என்று முன்னாள் இலங்கை அணியின் தலைவரும், தெரிவுக் குழுவின் தலைவருமான சனத் ஜெயசூரியா விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்கா முழங்கால் அறுவை சிகிச்சை செய்ததைத் தொடர்ந்து நீண்ட ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் தற்போது நீண்ட நாட்களாக இலங்கை அணியில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார்.
இது குறித்த நிருபரின் கேள்விக்கு பதிலளித்த தெரிவுக் குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா, லசித் மலிங்கா தனது உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் அணிக்கு விரைவில் திரும்பலாம்.
அவர் தான் குணமடைந்து விட்டதை அறிவிக்கும் பட்சத்தில் அவரை அணிக்கு வரவேற்க தயாராக இருக்கிறோம். மேலும், மலிங்காவுடன் எந்தவித மோதலும் கிடையாது. ஊடகங்கள் தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மலிங்கா எனக்கு ஒரு முக்கியமான வீரர். அவர் அணிக்கு திரும்பினால் எனக்கு மகிழ்ச்சியே என்று தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|