றக்பி உலகக் கிண்ணம் தென்னாபிரிக்கா வசமானது!

Sunday, October 29th, 2023

2023 ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்றது.

குறித்த தொடரின் இறுதிப்போட்டி இன்று (29) இடம்பெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதின.

இந்த போட்டியில் தென்னாபிரிக்கா அணி 12க்கு 11 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று உலகக் கிண்ணத்தை தன்வசப்படுத்தியது.

அத்துடன், தென்னாபிரிக்கா அணி றக்பி உலகக் கிண்ணத் தொடரை கைப்பற்றும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

000

Related posts: