யாழ் பல்கலை அணி வெற்றி!

Friday, September 22nd, 2017

அரியாலை சரஸ்­வதி சன­ச­மூக நிலை­யம் நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில்  இடம்­பெற்ற ஆட்டமொன்­றில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கம் போராடி வெற்­றி­பெற்­றது.

அரி­யாலை கால்­பந்­தாட்­டப் பயிற்சி நிலைய மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இந்த ஆட்­டம் இடம்பெற்­றது. ஆட்­டத்­தின் 13ஆவது நிமி­டத்­தில் ஐய­னார் அணி­யின் சார்­பாக முதல் கோலைப் பதிவு­செய்­தார் சுப­ராஜ். 19ஆவது நிமி­டத்­தில் பல்­க­லை­யின் கோலைப் பதி­வு­செய்து பதி­லடி கொடுத்தார் பத்ம நிதர்­சன். மாற் றங்­கள் இல்­லா­மல் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி. இரண்­டா­வது பாதி­யி­லும் கோல் கணக்­கில் மாற்­றங்­கள் ஏற்­ப­ட­வில்லை. சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்றியைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. 5:4 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக அணி. சிறந்த வீர­ராக பல்­க­லைக் கழ­கத்­தின் சல்­மான் பாருஸ் தெரிவா­னார்.

Related posts: