இலங்கை அணியை பந்தாடியது பாகிஸ்தான்!

Friday, March 1st, 2019

இலங்கையில் நடைபெற்று வரும் பார்வையற்றோருக்கான டி20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 261 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் நிசர் அலி அபாரமாக விளையாடி 140 ரன்கள் குவித்தார் இதன்பின்னர் 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

அந்த அணியின் வீரர்களும் சிறப்பாக ஆடினார்கள். ஆனாலும் இலங்கையால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 213 ரன்களே எடுக்க முடிந்தது.

இதனால் பாகிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த அணியின் நிசல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Related posts: