முரளி விஜய் – ஷா அதிரடி- பஞ்சாப்பிடம் வீழ்ந்தது மும்பை!

Sunday, May 15th, 2016

முரளி விஜய் மற்றும் ஷா ஆகியோர் அதி­ரடி காட்ட பஞ்சாப் அணி­யிடம் வீழ்ந்­தது மும்பை அணி.ஐ.பி.எல். தொடரில் நேற்று நடை­பெற்ற 43ஆவது லீக் போட்­டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய ரோஹித் ஷர்­மா தலை­மை­யி­லான மும்பை அணி நிர்ண­யிக்­கப்­பட்ட 20 ஓவர்­களில் 9 விக்­கெட்­டுக்­களை இழந்து 124 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்றுக்கொண்­டது.

மும்பை இந்­தியன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக ரோஹித் ஷர்மா மற்றும் சாண்ட் ஆகியோர் கள­மி­றங்­கினர். இதில் சாண்ட் ஓட்­ட­மேதும் பெறாத நிலையில் ஆட்­ட­மி­ழக்க அடுத்து களம்புகுந்தார் ராயுடு. இவரும் வந்த வேகத்­தி­லேயே வெளி­யேற, மும்பை அணி 8 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்கெட்­டுக்­களை இழந்து தடு­மா­றி­யது.

அதன்­பி­றகு வந்த ராணா ரோஹித்­துடன் ஜோடி சேர்ந்து ஓட்­டங்­களைப் பெற்றார். இதன்­போது ரோஹித் 15 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க, அடுத்து வந்த பட்­லரும் 9 ஓட்­டங்­க­ளுடன் பெவி­லியன் திரும்­பினார். ராணா25 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழந்தார்.

அதற்­க­டுத்து வந்த பொல்லார்ட்(27), பாண்­டியா (19), ஹர்­பஜன் சிங்(14) என சொற்ப ஓட்­டங்­க­ளுடன் ஆட்டமி­ழந்­தனர்.

இறு­தியில் மும்பை அணி 9 விக்­கெட்­டுக்­களை இழந்து 124 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது. 125 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் கள­மி­றங்­கிய பஞ்சாப் அணி 17 ஓவர்­களில் 3 விக்கெட்டுக்களை மாத்­திரம் இழந்து 127 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யது.

இதில் அணித் தலைவர் முரளி விஜய் 54 ஓட்­டங்­க­ளை யும், ஷா 56 ஓட்­டங்­க­ளையும் பெற்று அணியின் வெற்­றிக்கு வித்­திட்­டனர். இதில் அம்லா மற்றும் மெக்ஸ்வல் ஆகியோர் ஓட்­ட­மேதும் பெறாமல் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அசத்தியது.

Related posts: