சதம் அடிக்க நினைக்கவில்லை – விராத் கோலி

Tuesday, May 10th, 2016

றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவரான விராத் கோலி இடம்பெற்றுவரும் இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் இவ்வாண்டுக்கான போட்டிகளில் 2 சதங்களைப் பெற்றுள்ளார். எனினும், சதங்களை விட அணியின் வெற்றியே முக்கியமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணிக்கெதிராக நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், பூனே அணி விதித்த 192 என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி சார்பாக, 58 பந்துகளில் 108 ஓட்டங்களைப் பெற்ற விராத்கோலி, வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

இதற்கு முன்னர் அவர் பெற்ற சதத்தில், அவரது அணி தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில் கருத்துத் தெரிவித்த அவர், இந்தச் சதத்தைப் பெறுவதற்கு தான் திட்டமிட்டிருக்கவில்லை என்றார். போட்டி இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது, ஸ்கோர் பலகையில், வெற்றிபெற எவ்வளவு ஓட்டங்களைப் பெற வேண்டுமென்பதை தான் கவனித்துக் கொண்டிருந்தாகவும் அவர் தெரிவித்தார்.

இறுதியான இலக்காக, அணியின் வெற்றியே காணப்பட்டதாகத் தெரிவித்த அவர், இதற்கு முன்னைய போட்டியில், அணியினர் எவ்வளவு காயப்பட்டிருந்தார்கள் என்பதே அதற்கான காரணமெனவும் குறிப்பிட்டார். அணியைத் தூக்கி நிறுத்துவதற்கு, இவ்வாறானதொரு வெற்றி தேவைப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts: