முன்னிலை பெற்றது யாழ். இந்துக்கல்லூரி!

Saturday, March 10th, 2018

பம்­ப­லப்­பிட்டி இந்துக் கல்­லூ­ரிக்கும் யாழ்ப்­பாணம் இந்­துக்­கல்­லூரிக்கும்­­இடை­யி­லான ‘இந்துக்களின் சமர்’ என வர்­ணிக்­கப்­படும் வரு­டாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி யாழ். இந்துக்கல்லூரி மைதா­னத்தில் நேற்று ஆரம்­ப­மா­னது.

இப் போட்­டியில் நாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற பம்­ப­லப்­பிட்டி இந்­துக்­கல்­லூரி அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்­தது.

அதன்­படி முதலில் கள­மி­றங்­கிய பம்­ப­லப்­பிட்டி இந்­துக்­கல்­லூரி அணி 165 ஓட்­டங்­களைப் பெற்று சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது.

இந்­நி­லையில் தனது முதல் இன்­னிங்ஸை துடுப்­பெ­டுத்­தாடக் கள­மி­றங்­கிய யாழ். இந்­துக்­கல்­லூரி அணி ஆரம்­பத்­தி­லி­ருந்து நிதான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­யது.

இதன்­வி­ளை­வாக பம்­ப­லப்­பிட்டி இந்­துக்­கல்­லூரி அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்­ணிக்கை யைக் கடந்து யாழ். இந்­துக்­கல்­லூரி அணி துடுப்­பெ­டுத்­தாடி வரு­கி­றது.

நேற்­றைய முதல் நாளின் ஆட்­ட­நேர முடிவில் யாழ். இந்­துக்­கல்­லூரி 42 ஓவர்­களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்று 47 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது. இன்று போட்டியின் இரண்டாவதும் கடைசியுமான நாளாகும்.

Related posts: