முன்னிலை பெற்றது யாழ். இந்துக்கல்லூரி!
Saturday, March 10th, 2018பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும்இடையிலான ‘இந்துக்களின் சமர்’ என வர்ணிக்கப்படும் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி யாழ். இந்துக்கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி அணி 165 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ். இந்துக்கல்லூரி அணி ஆரம்பத்திலிருந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதன்விளைவாக பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கை யைக் கடந்து யாழ். இந்துக்கல்லூரி அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
நேற்றைய முதல் நாளின் ஆட்டநேர முடிவில் யாழ். இந்துக்கல்லூரி 42 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்று 47 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது. இன்று போட்டியின் இரண்டாவதும் கடைசியுமான நாளாகும்.
Related posts:
|
|