கிண்ணத்தை சுவீகரித்தது சுண்டுக்குளி மகளிர்!

Sunday, May 20th, 2018

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற ரென்னிஸ் தொடரில் 17 வயது பெண்கள் பிரிவில் சுண்டுக்குளி பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி கிண்ணம் வென்றது.

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் ரென்னிஸ் மைதானத்தில் இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி அணி மோதியது.

மூன்று செற்களைக் கொண்ட ஆட்டத்தின் முதலாவது ஒற்றையர் பிரிவில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணியின் சார்பில் அஸ்மிகாவும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி அணியின் சார்பில் துலக்சிகாவும் மோதினர்.

முதலிரு செற்களையும் 6:0, 6:0 என்ற புள்ளிகளின் அடிப்படையில் அஸ்மிதா கைப்பற்றினார். இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணியின் சார்பில் அபிசாளினியும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி அணியின் சார்பில் மதுசாவும் மோதினர்.

அபிசாளினி 6:1, 6:2 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முதலிரு செற்களையும் கைப்பற்றியதை அடுத்து 2:0 என்ற நேர்செற் கணக்கில் வென்று கிண்ணத்தைப் பெற்றது சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணி.

Related posts: