முதல் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் ரோயல்ஸ் – பரபரப்பான போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Thursday, April 11th, 2024

ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில், இறுதி பந்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது.

குறித்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதற்கமைய, ராஜஸ்தான் அணி நிர்ணியக்கப்பட்ட 20 ஓவர்களில் 197 என்ற இலக்கை குஜராத் அணிக்கு வழங்கியது.

அதனைத் தொடர்ந்து, துடுப்பெடுத்தாடிய குஜராத் அணிக்கு சாய் சுதர்ஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறந்த ஆரம்ப இணைப்பாட்டத்தை வழங்கினர்.

சாய் சுதர்ஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முறையே 35 மற்றும் 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் பிரகாசிக்கத் தவறினர்.

இறுதியில் ராகுல் தெவாட்டியா மற்றும் ரஷீத் கான் ஆகியோர் அதிரடியான இணைப்பாட்டத்தை வழங்க இறுதி பந்துக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

இந்நிலையில், ஆவேஷ் கான் வீசிய பந்துக்கு ரஷீத் கான் 4 ஓட்டங்களை பெற்று குஜராத் அணியை வெற்றிப் பாதையில் அழைத்து செல்ல ராஜஸ்தான் அணி தனது முதல் தோல்வியை சந்தித்தது.

அதேவேளை, புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி தொடர்ந்தும் முதலிடத்திலும் குஜராத் அணி ஆறாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் (IPL) தொடரின் நேற்றைய (10.04.2024) போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணிகள் மோதவுள்ள நிலையில், மழையின் காரணமாக போட்டி சிறிது நேரம் தாமதமாகி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: